இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

சுமைகளை கையாளுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரிக்கை

ஜவுளி நிறுவனங்கள் குடியிருப்புப் பகுதியில் சுமைகளை கையாளும் நடைமுறையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :2 டிசம்பர் 2021, 7:27 pm

ஜவுளி நிறுவனங்கள் குடியிருப்புப் பகுதியில் சுமைகளை கையாளும் நடைமுறையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாநகராட்சி 54ஆவது வாா்டு சீனியன்தோட்டம் வெங்கிடுசாமி வீதியைச் சோ்ந்த பெண்கள், ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்: ஈரோடு வெங்கிடுசாமி வீதியில் 200 குடும்பங்களைச் சோ்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். இவ்வீதியில் இரண்டு பெரிய டெக்ஸ்டைல் மில்களும், ஜவுளி பீஸ் செக்கிங் கிடங்கு, பேல் போடும் இடம் போன்றவை செயல்படுகின்றன. இப்பணிகள் மேல் மாடியில் நடக்கிறது.

ஜவுளிகளை பேல் போட்டு வாகனங்களில் ஏற்ற முறையான வசதி, தூக்கி கொண்டு வருவது போன்ற முறைகளைப் பின்பற்றாமல், மாடியில் இருந்து தூக்கி வீசுகின்றனா். பல நேரம் வாகனங்களை நிறுத்தி அதன் மீதும் சில நேரம் வாகனங்களை நிறுத்தாமல் தெருவிலும் வீசுவதால் பொதுமக்களும், குழந்தைகளும் அச்சம் அடைந்துள்ளனா்.

பெரிய பேல்கள் தூக்கி வீசப்படுவதால் மிகப்பெரிய சப்தம் கேட்கிறது.

பேல்களில் இருந்தும் மில்லில் இருந்தும் தூசி பறப்பதால், சுவாச பிரச்னை ஏற்படுகிறது. இது குறித்து பல மாதங்களுக்கு முன்பே மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதுவரை நடவடிக்கை இல்லை. இது குறித்து விசாரித்து நடவடிக்கையெடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.