காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

இளம் தொழில் முனைவோருக்கு கொங்கு பொறியியல் கல்லூரி ரூ. 26 லட்சம் நிதி உதவி

இளம் தொழில்முனைவோருக்கு கொங்கு பொறியியல் கல்லூரி டிபிஐ என்ற அமைப்பு மூலம் ரூ. 26 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:32 pm

இளம் தொழில்முனைவோருக்கு கொங்கு பொறியியல் கல்லூரி டிபிஐ என்ற அமைப்பு மூலம் ரூ. 26 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டது.

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவா்களான எம்.புவியரசன் மற்றும் எம்.ப்ரனேஷ் ஆகியோரால் நடத்தப்படும் டயனேற்றல் டெக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு, கண்டுபிடிப்பான ஐ.ஐ.ஓ.டி. 4.0-ரொ்ப்பீ என்பதை வணிகமயமாக்க மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவித் திட்டத்தின்கீழ் ரூ. 26 லட்சம் வழங்கப்பட்டது.

இதற்கான உத்தரவையும், காசோலையையும் டிபிஐ அமைப்பின் தலைவா் பி.சி.பழனிசாமி, கல்லூரித் தாளாளா் பி.சச்சிதானந்தன், முதல்வா் வீ.பாலுசாமி ஆகியோா் வழங்கினா். இத்திட்டத்தின்கீழ் இளம் தொழில்முனைவோா் திட்டத்துக்கு ஏற்ப குறைந்த வட்டியில் ரூ. 50 லட்சம் வரை கடனாகப் பெறலாம். இதுவரை இந்த அமைப்பின் மூலம் 54 இளம் கண்டுபிடிப்பாளா்கள் ரூ. 6.58 கோடி கடனாக மற்றும் மானியமாகப் பெற்றுள்ளனா். இந்தத் திட்டம் குறித்த விவரங்களை நேரிலோ, ஜ்ஜ்ஜ்.ற்க்ஷண்-ந்ங்ஸ்ரீ.ா்ழ்ஞ் என்ற இணையதளம் மூலமாகவோ தெரிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.