

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வழக்கமான மழைப்பொழிவை விட இந்தாண்டு கூடுதலாக மழை பெய்துள்ள நிலையில், நேற்று காலை முதல் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.



மழை பெய்த போதிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதியடைந்தனர். ஈரோடு ரயில்நிலையத்தில் முன்பதிவு மையம் அருகே மழை நீர் தேங்கி நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.



ஈரோடு பிரப்சாலையில் தனியார் பள்ளி அருகே மழை நீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் ஓடை, சுண்ணாம்பு ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம், பவானி 4.4மில்லிமீட்டர், சத்தி 10, தாளவாடி 18, கவுந்தப்பாடி 7.6, அம்மாபேட்டை 9.6, கொடிவேரி 6, குண்டேரிப்பள்ளம் 4.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காபூல் மருத்துவமனையை தாக்கியது போர்க்குற்றம்! ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் வேதனை!

“என்னால் எதையும் செய்ய முடியும்”.. கியூபாவை கைப்பற்றுவது பற்றி டிரம்ப் சூசகம்!

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்! தேர்தல் ஆணையத்தின் புதிய வசதி!
ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்! 400 பேர் பலி!!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

