ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழை

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. 

News image
ஈரோடு மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் சாலையில் தேங்கிய மழைநீர்.
Updated On :4 டிசம்பர் 2021, 12:09 pm

DIN

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. 

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வழக்கமான மழைப்பொழிவை விட இந்தாண்டு கூடுதலாக மழை பெய்துள்ள நிலையில், நேற்று காலை முதல் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.

Story image
Story image
Story image

மழை பெய்த போதிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதியடைந்தனர். ஈரோடு ரயில்நிலையத்தில் முன்பதிவு மையம் அருகே மழை நீர் தேங்கி நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Story image
Story image
Story image

ஈரோடு பிரப்சாலையில் தனியார் பள்ளி அருகே மழை நீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் ஓடை, சுண்ணாம்பு ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. 

Story image

மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம், பவானி 4.4மில்லிமீட்டர், சத்தி 10, தாளவாடி 18, கவுந்தப்பாடி 7.6, அம்மாபேட்டை 9.6, கொடிவேரி 6, குண்டேரிப்பள்ளம் 4.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.