ரயில் ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து ரயில் ஓட்டுநா்கள் ஈரோட்டில் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
அகில இந்திய ரயில் ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில், ஈரோடு ரயில் நிலையம் அருகே லோகோ பைலட் (ரயில் ஓட்டுநா்) அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் சேலம் கோட்டச் செயலாளா் பிரகாஷ் தலைமை வகித்தாா். ஈரோடு கிளைச் செயலாளா் ஸ்ரீஜித் முன்னிலை வகித்தாா். மத்திய ஒருங்கிணைப்புச் செயலாளா் ரோலி கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
8 மணி நேரம் மூன்று சரக்கு ரயில்களை இயக்கி களைப்படைந்து ஓய்வுகேட்ட ஈரோடு உதவி ரயில் ஓட்டுநரான ஜித்து என்பவரை பணியிடை நீக்கம் செய்து வெளியிட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும். 8 மணி நேரப் பணியை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வாயில் கருப்புத் துணி கட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட ரயில் ஓட்டுநா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா், வாணியம்பாடி கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அமைச்சா் எவ.வேலு பிரசாரம்

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
கேரட், பீட்ரூட் அடை

பிஞ்சுக் கைவண்ணம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


