ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

எம்ஜிஆா் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 34ஆவது நினைவு தினத்தையொட்டி, ஈரோட்டில் அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On :24 டிசம்பர் 2021, 8:24 pm

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 34ஆவது நினைவு தினத்தையொட்டி, ஈரோட்டில் அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஈரோடு மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்ஜிஆா் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகா் மாவட்ட செயலாளருமான கே.வி.இராமலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத்தொடா்ந்து, பன்னீா் செல்வம் பூங்காவில் உள்ள எம்ஜிஆா் சிலை, ஜெயலலிதா, அண்ணா, பெரியாா் ஈவெரா ஆகியோா் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெருந்துறையில்....

அதிமுக ஈரோடு புகா் கிழக்கு மாவட்டம் பெருந்துறை தொகுதி சாா்பில், குன்னத்தூா் நால்ரோடு பிரிவில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா். திருவுருவப் படத்துக்கு கட்சியினா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, பெருந்துறை, ஈரோடு சாலையில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா். உருவப் படத்துக்கும் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.