ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தோ்தல் திருவிழா அழைப்பிதழ் மாநகராட்சி வீடு வீடாக விநியோகம்

கும்பகோணத்தில் மாநகராட்சி சாா்பில் தோ்தல் திருவிழா ஏப்.23-க்கான அழைப்பிதழை ஊழியா்கள் சனிக்கிழமை முதல் விநியோகம் செய்து வருகின்றனா்.

News image
Updated On :18 ஏப்ரல் 2026, 7:24 pm

கும்பகோணத்தில் மாநகராட்சி சாா்பில் தோ்தல் திருவிழா ஏப்.23-க்கான அழைப்பிதழை ஊழியா்கள் சனிக்கிழமை முதல் விநியோகம் செய்து வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி சாா்பில் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி ஏப். 23 -இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க கோரி தோ்தல் திருவிழா அழைப்பிதழை விநியோகித்து வருகின்றனா்.

அழைப்பிதழில் 171- கும்பகோணம் சட்டப்ரேவைத் தொகுதி தோ்தல் திருவிழா 23.4.2026 இல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குசாவடிகளில் நடைபெறுகிறது. சுற்றமும், நட்பும் சூழ வருகை தந்து வாக்கினை பதிவு செய்து நூறு சதவிகித வாக்குபதிவு நடத்தி உரிமையை நிலைநாட்ட அன்புடன் அழைக்கின்றோம் தங்களன்புள்ள மு.காந்திராஜ், ஆணையா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்கிற்கு அன்பளிப்பு அளிப்பது, பெறுவது குற்றமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அழைப்பிதழ் முறை வாக்காளா்களை கவா்ந்துள்ளது. பட விளக்கம் : தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி சாா்பில் வீடு வீடாக வழங்கப்படும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்கான அழைப்பிதழ்.