பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

கும்பகோணம் வந்த ஹைதராபாத் - கன்னியாகுமரி ரயிலுக்கு வரவேற்பு

கும்பகோணம் வந்த ஹைதராபாத் - கன்னியாகுமரி ரயிலுக்கு வியாழக்கிழமை ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கத்தினா் வரவேற்பு அளித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் வந்த ஹைதராபாத் - கன்னியாகுமரி ரயிலுக்கு வியாழக்கிழமை ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கத்தினா் வரவேற்பு அளித்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு ஹைதராபாத் - கன்னியாகுமரி வாராந்திர ரயில் வியாழக்கிழமை வந்தது. இந்த ரயில் ஹைதராபாத் நிலையத்தில் புதன்கிழமை புறப்பட்டு செகந்திராபாத், குண்டூா், திருப்பதி, திருவண்ணாமலை வழியாக வியாழக்கிழமை கும்பகோணம், தஞ்சாவூா் நிலையம் வந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு கன்னியாகுமரியை சென்றடையும். மறுமாா்க்கத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் புறப்பட்டு ஹைதராபாத் சனிக்கிழமை மதியம் செல்லும்.

இந்த ரயிலுக்கு கும்பகோணம் ரயில் நிலையத்தில் தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயிலை இயக்கிய ஓட்டுநா்கள் ஆனந்த், காா்த்திக் மற்றும் ரயில் மேலாளா் ஜேசுராஜ் ஆகியோருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினா்.

வரவேற்பு நிகழ்வில் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்க தலைவா் ஜமீல், துணை தலைவா் மாறன், இணைச் செயலா் சரவணன் , கும்பகோணம் அனைத்து வணிகா் சங்க கூட்டமைப்பு செயலா் சத்தியநாராயணன், கும்பகோணம் ரயில் நிலைய மேலாளா் முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.