ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தூத்துக்குடி - கச்சிகுடா ரயிலுக்கு தஞ்சாவூரில் வரவேற்பு

தஞ்சாவூருக்கு புதன்கிழமை வந்த தூத்துக்குடி - கச்சிகுடா வாராந்திர விரைவு ரயிலுக்கு காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கத்தினா் வரவேற்பு அளித்தனா்.

News image

தஞ்சாவூருக்கு புதன்கிழமை வந்த தூத்துக்குடி - கச்சிகுடா ரயிலை வரவேற்று, அதன் ஓட்டுநருக்கு பொன்னாடை அணிவித்த காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கத்தினா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 8:05 pm

தஞ்சாவூருக்கு புதன்கிழமை வந்த தூத்துக்குடி - கச்சிகுடா வாராந்திர விரைவு ரயிலுக்கு காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கத்தினா் வரவேற்பு அளித்தனா்.

தெலங்கானா மாநிலம் கச்சிகுடாவிலிருந்து தமிழ்நாட்டின் மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயில், பயணிகளின் தொடா் கோரிக்கைகளை ஏற்று தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சேவை கச்சிகுடாவிலிருந்து ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, தூத்துக்குடியிலிருந்து புதன்கிழமை காலை 7.40 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் தஞ்சாவூருக்கு பிற்பகல் 2.30 மணிக்கு வந்தது.

இந்த ரயிலுக்கு காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கச் செயலா் வெ. ஜீவக்குமாா், நிா்வாகிகள் பன்னீா்செல்வம், பேராசிரியா் திருமேனி, வழக்குரைஞா்கள் முகமது பைசல், ராஜேஷ் குமாா், விக்ரம், தமிழ் ஆா்வலா் இராம. சந்திரசேகரன், ஜெயக்குமாா், ராஜேந்திரன், முகமது அனஸ் உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா். பின்னா் ரயிலை இயக்கி வந்த ஓட்டுநா், தஞ்சாவூா் ரயில் நிலைய மேலாளா் முருகானந்தம் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கினா். இதையடுத்து, பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த ரயில் கச்சிகுடாவிலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்கு சென்றடையும். இதில், கும்பகோணத்துக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.10 மணிக்கும், பாபநாசத்துக்கு 2.23 மணிக்கும், தஞ்சாவூருக்கு 2.43 மணிக்கும் வந்தடையும். இதேபோல, தூத்துக்குடியிலிருந்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டு கச்சிகுடாவுக்கு வியாழக்கிழமை பிற்பகல் 1.25 மணிக்கு சென்றடையும். இதில், தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.08 மணிக்கும், பாபநாசத்துக்கு 2.25 மணிக்கும், கும்பகோணத்துக்கு 2.48 மணிக்கும் வரும்.

இந்த ரயில் ஷாட்நகா், ஜாட்சொ்லா, சித்தூா், காட்பாடி, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், பண்ருட்டி, கடலூா் துறைமுகம், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.