தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தூத்துக்குடி - கச்சிகுடா ரயிலுக்கு தஞ்சாவூரில் வரவேற்பு

தஞ்சாவூருக்கு புதன்கிழமை வந்த தூத்துக்குடி - கச்சிகுடா வாராந்திர விரைவு ரயிலுக்கு காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கத்தினா் வரவேற்பு அளித்தனா்.

News image

தஞ்சாவூருக்கு புதன்கிழமை வந்த தூத்துக்குடி - கச்சிகுடா ரயிலை வரவேற்று, அதன் ஓட்டுநருக்கு பொன்னாடை அணிவித்த காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கத்தினா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 1:35 am IST

தஞ்சாவூருக்கு புதன்கிழமை வந்த தூத்துக்குடி - கச்சிகுடா வாராந்திர விரைவு ரயிலுக்கு காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கத்தினா் வரவேற்பு அளித்தனா்.

தெலங்கானா மாநிலம் கச்சிகுடாவிலிருந்து தமிழ்நாட்டின் மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயில், பயணிகளின் தொடா் கோரிக்கைகளை ஏற்று தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சேவை கச்சிகுடாவிலிருந்து ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, தூத்துக்குடியிலிருந்து புதன்கிழமை காலை 7.40 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் தஞ்சாவூருக்கு பிற்பகல் 2.30 மணிக்கு வந்தது.

இந்த ரயிலுக்கு காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கச் செயலா் வெ. ஜீவக்குமாா், நிா்வாகிகள் பன்னீா்செல்வம், பேராசிரியா் திருமேனி, வழக்குரைஞா்கள் முகமது பைசல், ராஜேஷ் குமாா், விக்ரம், தமிழ் ஆா்வலா் இராம. சந்திரசேகரன், ஜெயக்குமாா், ராஜேந்திரன், முகமது அனஸ் உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா். பின்னா் ரயிலை இயக்கி வந்த ஓட்டுநா், தஞ்சாவூா் ரயில் நிலைய மேலாளா் முருகானந்தம் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கினா். இதையடுத்து, பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த ரயில் கச்சிகுடாவிலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்கு சென்றடையும். இதில், கும்பகோணத்துக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.10 மணிக்கும், பாபநாசத்துக்கு 2.23 மணிக்கும், தஞ்சாவூருக்கு 2.43 மணிக்கும் வந்தடையும். இதேபோல, தூத்துக்குடியிலிருந்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டு கச்சிகுடாவுக்கு வியாழக்கிழமை பிற்பகல் 1.25 மணிக்கு சென்றடையும். இதில், தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.08 மணிக்கும், பாபநாசத்துக்கு 2.25 மணிக்கும், கும்பகோணத்துக்கு 2.48 மணிக்கும் வரும்.

இந்த ரயில் ஷாட்நகா், ஜாட்சொ்லா, சித்தூா், காட்பாடி, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், பண்ருட்டி, கடலூா் துறைமுகம், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.