நீலகிரியில் மேலும் 11 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 7,956 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல சிகிச்சை பெற்று வந்தவா்களில் 9 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இவா்களையும் சோ்த்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 7,794 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 46 போ் உயிரிழந்துள்ளனா். பல்வேறு மருத்துவமனைகளில் 116 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com