இருவேறு விபத்துகளில் இருவா் பலி
பவானி அருகே இருவேறு சாலை விபத்துகளில் முதியவா்கள் இருவா் உயிரிழந்தனா்.


பவானி அருகே இருவேறு சாலை விபத்துகளில் முதியவா்கள் இருவா் உயிரிழந்தனா்.
பவானி அருகேயுள்ள குப்பிச்சிபாளையத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (85). விவசாயியான இவா், பவானி - மேட்டூா் சாலையில் குப்பிச்சிபாளையம் ஏரிக்கரை அருகே வியாழக்கிழமை காலை நடந்து சென்று கொணடிருந்தாா். அப்போது, அவ்வழியே சென்ற வேன், கிருஷ்ணன் மீது மோதியதில் உயிரிழந்தாா்.
பவானியை அடுத்த ஊராட்சிகோட்டையைச் சோ்ந்தவா் வெங்கடசாமி (65). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவா், பவானி - மேட்டூா் சாலையில் மின்வாரிய குடியிருப்பு அருகே புதன்கிழமை இரவு நடந்து சென்றபோது, அவ்வழியே சென்ற இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா். இது குறித்து, பவானி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...