காவிரி உபரி நீரை அந்தியூா் பகுதி ஏரி, குளங்களில் நிரப்ப நடவடிக்கை: முதல்வா் உறுதி
காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேறும்போது, காவிரியில் வரும் உபரி நீரை அந்தியூா் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

கள்ளிப்பட்டியில் திரண்டிருந்த மக்களிடையே பேசுகிறாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.









