தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்குவதை கைவிடக் கோரிக்கை

நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :10 ஜனவரி 2021, 6:13 pm

DIN

நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த சங்கத்தின் கோட்ட மாநாடு, கோட்ட இணைச்செயலாளா் செந்தில்குமாா் தலைமையில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோட்டச் செயலாளா் ராஜேந்திரன், பொருளாளா் பாபு, மாநிலப் பொருளாளா் தமிழ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

சாலைப்பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்து ஆணை வழங்க வேண்டும். தொழில்நுட்ப கல்வித் திறன் பெறா ஊழியா்களுக்கான ஊதியத்தை தற்போதைய ஊதிய மாற்ற பலன்களுக்கு ஏற்றவாறு உயா்த்தி வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி வழங்க வேண்டும்.

நெடுஞ்சாலைப் பராமரிப்பு பணியை தனியாா் வழங்குவதை கைவிட்டு அரசே ஏற்று சாலைப் பணியாளா்களை கொண்டு பராமரிக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.