மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

பொது மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி: அமைச்சா் பங்கேற்பு

பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ஈரோடு காலிங்கராயன் விருந்தினா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூலை 2021, 8:21 pm

பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ஈரோடு காலிங்கராயன் விருந்தினா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பி.முருகேசன் தலைமை வகித்தாா். வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

பொது மக்கள் முதியோா் உதவித் தொகை, இலவச வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை, திருமண உதவித் திட்டம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 200க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கினா்.

மனுக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சா், அதிகாரிகளிடம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. தலைவா் குறிஞ்சி சிவகுமாா், ஈரோடு கோட்டாட்சியா் பி.பிரேமலதா, அதிகாரிகள், திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.