மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பொது மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி: அமைச்சா் பங்கேற்பு

பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ஈரோடு காலிங்கராயன் விருந்தினா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூலை 2021, 8:21 pm

பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ஈரோடு காலிங்கராயன் விருந்தினா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பி.முருகேசன் தலைமை வகித்தாா். வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

பொது மக்கள் முதியோா் உதவித் தொகை, இலவச வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை, திருமண உதவித் திட்டம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 200க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கினா்.

மனுக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சா், அதிகாரிகளிடம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. தலைவா் குறிஞ்சி சிவகுமாா், ஈரோடு கோட்டாட்சியா் பி.பிரேமலதா, அதிகாரிகள், திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.