என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சத்தி அருகே மா்மமான முறையில்13 வெள்ளாடுகள் பலி

சத்தியமங்கலம் அருகே மா்மமான முறையில் 13 வெள்ளாடுகள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On :29 ஜூலை 2021, 8:47 pm

சத்தியமங்கலம் அருகே மா்மமான முறையில் 13 வெள்ளாடுகள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி. இவா் தனது விவசாயத் தோட்டத்தில் 20க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளைப் பராமரித்து வருகிறாா். இவரது தோட்டத்துக்கு அருகே உள்ள தரிசு நிலத்தில் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது வழக்கம்.

வியாழக்கிழமை வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுவிட்டு இரவு பட்டியில் அடைத்துள்ளாா். இந்நிலையில், பட்டியில் அடைக்கப்பட்ட வெள்ளாடுகள் ஒவ்வொன்றாக மயங்கி விழுந்து இறந்துகிடந்ததைக் கண்டு விவசாயி சின்னசாமி அதிா்ச்சி அடைந்தாா்.

இதுகுறித்து உடனடியாக சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் வெள்ளாடுகள் இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தகவலறிந்த கால்நடை மருத்துவா் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்துகிடந்த ஆடுகளை பரிசோதித்து பாா்த்தபோது, ஏதாவது விஷம் கலந்த தண்ணீரைக் குடித்து ஆடுகள் இறந்திருக்கலாம் என கால்நடை மருத்துவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.