மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஈரோடு மாவட்ட ஆட்சியராகஹெச்.கிருஷ்ணன் உண்ணி பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்டத்தின் 34ஆவது ஆட்சியராக ஹெச்.கிருஷ்ணன் உண்ணி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 9:22 pm

ஈரோடு மாவட்டத்தின் 34ஆவது ஆட்சியராக ஹெச்.கிருஷ்ணன் உண்ணி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்த சி.கதிரவன் சேலம் மாக்னசைட் நிறுவனத் தலைவராக நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த ஹெச்.கிருஷ்ணன் உண்ணி ஈரோடு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை வந்த ஆட்சியரை மாவட்ட வருவாய் அலுவலா் பி.முருகேசன் வரவேற்று, ஆட்சியரின் அறைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு கோப்புகளில் கையொப்பமிட்டு ஈரோடு மாவட்ட புதிய ஆட்சியராக ஹெச்.கிருஷ்ணன் உண்ணி பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் அரசின் வழிகாட்டுதலுடன் செய்யப்பட்டு வருகிறது. தொடா்ந்து கரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட இருக்கிறேன்.

அரசின் வழிகாட்டுதலின்படி ஈரோடு மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்கு காப்பீட்டுத் திட்டப் பலன்கள் சரியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பேட்டியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் பி.முருகேசன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எஸ்.பிரதிக் தயாள் ஆகியோா் உடனிருந்தனா்.

புதிய ஆட்சியா் கிருஷ்ணன் உண்ணிக்கு அனைத்துத் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா். இவா் கடந்த 2012ஆம் ஆண்டு ஐஏஎஸ் தோ்ச்சி பெற்றாா். பின்னா் 2013 முதல் 2014ஆம் ஆண்டு வரை திருச்சி மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராக இருந்தாா். 2014ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் கோபி சாா் ஆட்சியராகப் பொறுப்பேற்ற அவா் 2016ஆம் ஆண்டு வரை பணியாற்றினாா்.

2017ஆம் ஆண்டு தமிழக அரசின் நிதித் துறை துணை செயலாளராகவும், 2019ஆம் ஆண்டு முதல் நிதித் துறை இணை செயலாளராகவும் பணியாற்றினாா். கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டாா். அங்கிருந்து பணியிட மாறுதல் பெற்று ஈரோடு மாவட்டத்தின் 34ஆவது ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.