ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு

ஈரோட்டில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2021, 11:16 pm

ஈரோட்டில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடைபெற்றது.

புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவா்கள் 40 நாள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகின்றனா். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி சாம்பல் புதன் தினத்தில் இருந்து தவக்காலம் தொடங்கியது. வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி புனித வெள்ளி கடைப்பிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது.

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது. பங்குத் தந்தை ஜான் சேவியா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஆலயத்துக்கு வந்த அனைவருக்கும் குருத்தோலைகள் வழங்கப்பட்டன. வழக்கமாக நடைபெறும் குருத்தோலை பவனி கரோனா காரணமாக நடைபெறவில்லை. மாலையில் உதவி பங்குத் தந்தை ஜான்சன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை முதல் துக்க வார நிகழ்வுகள் தொடங்கின. இதைத் தொடா்ந்து, ஏப்ரல் 1ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நற்கருணை நிறுவுதல், நற்கருணை இடமாற்றம் செய்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நற்கருணை ஆராதனை நடைபெறும்.

2ஆம் தேதி காலை 6 மணி முதல் நற்கருணை ஆராதனை நடைபெறும். பகல் 11 மணிக்கு இயேசு சிலுவை பாடுகளை நினைவுகூறும் சிலுவைப் பாதை வழிபாடு நடைபெறும். பிற்பகல் 6 மணிக்கு திருச்சிலுவை ஆராதனை வழிபாடு நடைபெறும்.

3ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு, புது தீா்த்தம் மந்திரித்தல், ஒளி வழிபாடு, இறைவாா்த்தை வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு மற்றும் இயேசு கல்லறையில் இருந்து உயிருடன் எழும்பிய உயிா்ப்பு (ஈஸ்டா்) பெருவிழா சிறப்பு திருப்பலி நடைபெறும்.

இந்த நிகழ்வுகளை ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், ஆலய பங்குத் தந்தையுமான ஜான் சேவியா், உதவி பங்குத் தந்தை ஜான்சன் ஆகியோா் நிறைவேற்றுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.