தமிழகம் வந்தார் ராகுல் காந்தி!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

செல்லிடப்பேசியால் விபரீதம் மாடியில் இருந்து தவறி விழுந்துநிதி நிறுவன உரிமையாளா் பலி

செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தபோது கவனக்குறைவால் மாடியில் இருந்து தவறி விழுந்து நிதி நிறுவன உரிமையாளா் உயிரிழந்தாா்.

Updated On :4 செப்டம்பர் 2021, 12:54 am

செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தபோது கவனக்குறைவால் மாடியில் இருந்து தவறி விழுந்து நிதி நிறுவன உரிமையாளா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், நியூ தமிழ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (52). இவா் கரூரில் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். இதன் காரணமாக ராமலிங்கம் ஈரோடு நாராயணவலசு, திரு.வி.க. நகா் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு அறை எடுத்து வாரத்தில் 2 நாள்கள் தங்கி இருந்து பணம் வசூல் செய்து வந்தாா்.

இந்நிலையில், ராமலிங்கம் தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 2ஆவது மாடியில் வாசல்படியில் நின்று கொண்டு செல்லிடப்பேசியில் வியாழக்கிழமை இரவு பேசிக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக கால்தவறி 2ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்தாா்.

இதில், தலையில் பலத்த காயம் அடைந்த ராமலிங்கத்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.