வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

கொடிவேரி கூட்டு குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

கொடிவேரி கூட்டு குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:55 pm

DIN

கொடிவேரி கூட்டு குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சட்டப் பேரவையில் வியாழக்கிழமை பேசியதாவது:

பெருந்துறை தொகுதியிலுள்ள மக்களின் குடிநீா்த் தேவைக்காக ரூ. 224 கோடியில் கொடிவேரி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலமாக பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக் உள்பட்ட 28 ஊராட்சிகள், பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம், காஞ்சிகோயில், நல்லாம்பட்டி, பள்ளபாளையம், பெத்தாம்பாளையம் ஆகிய பேரூராட்சிகள், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 4 ஊராட்சிகள் மற்றும் திருப்பூா் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 37 ஊராட்சிகள் மற்றும் ஊத்துக்குளி, குன்னத்தூா் பேரூராட்சிகள் பயன்பெற உள்ளன. இத்திட்ட பணிகள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் முடிவடைய உத்தேசித்திருந்த போதிலும், இன்னும் பணிகள் நிறைவடையாமல் உள்ளன. எனவே, இந்தப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றாா்.

இதற்கு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்:

கொடிவேரி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. கரோனா பாதிப்பு காரணமாக 4 மாதங்கள் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், அடுத்த மாதம் தொடக்கிவைக்கிறாா். இதன் காரணமாக 5.40 லட்சம் மக்களுக்கு 25 மில்லியன் லிட்டா் குடிநீா் கிடைக்கும். விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளையும் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் சோ்ப்பது நிதியைப் பொருத்தே முடிவு செய்யப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.