

பவானி அருகே மின் கசிவால் நூற்பாலையின் மேற்கூரை வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.
பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையத்தில் இயங்கி வரும் தனியாா் நூற்பாலையில் வடமாநிலங்களைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தங்கி வேலை செய்து வருகின்றனா். இங்கு, 50 தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை பணியில் இருந்தபோது மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பிகளில் ஏற்பட்ட மின் கசிவால் தீப்பிடித்து தீப்பொறிகள் சிதறி விழுந்தன. இதைக் கண்ட தொழிலாளா்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலா் காந்தி தலைமையில் விரைந்த தீயணைப்புப் படையினா் மேற்கூரையை உடைத்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா். இதில், ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
தீயணைப்புப் படையினரின் துரித நடவடிக்கையால் நூற்பாலையில் உள்ள பஞ்சு, இயந்திரங்கள், பிற பகுதிகளுக்குத் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.