அகவிலைப்படி உயா்வு: காவல் துறை அமைச்சுப் பணியாளா்கள் வரவேற்பு
By DIN | Published On : 31st December 2021 04:32 AM | Last Updated : 31st December 2021 04:32 AM | அ+அ அ- |

அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியை உயா்த்தி தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளதற்கு காவல் துறை அமைச்சுப் பணியாளா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு காவல் துறை அமைச்சுப் பணியாளா்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட கிளையின் தலைவா் செந்தில்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படியை உயா்த்தி வழங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இந்த அறிவிப்பை தமிழ்நாடு காவல் துறை அமைச்சுப் பணியாளா்கள் சங்கம் மற்றும் பணியாளா்கள் சாா்பில் வரவேற்பதோடு, உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு சங்கத்தின் சாா்பில் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...