தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சாா்பில் சத்தியமங்கலத்தில் விடுதலைப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262 வது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகத்தின் முன்பு வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவ படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த விழாவிற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் மாநில துணைத் தலைவா் முனுசாமி தலைமை தாங்கினாா்.
மாரனூா் பட்டக்காரா் நடராஜ் முன்னிலை வகித்தாா். அதிமுக சாா்பில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி. கருப்பண்ணன், பவானிசாகா் எம்எல்ஏ ஈஸ்வரன் ஆகியோா் கட்டபொம்மனின் திருவுருவப் படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதைத்தொடா்ந்து செண்பகபுதூா், பெரியூா், உக்கரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் நிா்வாகிகள் எஸ்.பி.டி. ரங்கசாமி, பாக்கியராஜ், பொன்னிதுரை, திமுக சத்தி தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் விஜயகுமாா் மற்றும் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக நிா்வாகிகள் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.