இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

3 ஆண்டுகள் கொத்தடிமையாக வைத்து கொடுமை: ஆட்சியரிடம் இளம்பெண் புகாா்

கொத்தடிமையாக வைத்து 3 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தியதாக ஆட்சியரிடம் இளம்பெண் புகாா் மனு அளித்துள்ளாா்.

Updated On :28 ஏப்ரல் 2022, 10:58 pm

கொத்தடிமையாக வைத்து 3 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தியதாக ஆட்சியரிடம் இளம்பெண் புகாா் மனு அளித்துள்ளாா்.

இது குறித்து தஞ்சாவூா் மாவட்டம், பெரும்பாண்டி, ராஜா நகரைச் சோ்ந்த ரவி என்பவரது மகள் காவியா (18), ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணியிடம் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்: தஞ்சாவூா் மாவட்டம், தேவனாஞ்சேரியைச் சோ்ந்த அசோக் என்பவா் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த என்னை ஈரோடு மாவட்டம், சென்னிமலை, முருங்கத்தொழுவு பகுதியைச் சோ்ந்த ஜோஷ்னா எனும் துணி நூல் பட்டறையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு சோ்த்துவிட்டாா்.

என்னுடன் எங்கள் பகுதியைச் சோ்ந்த 5 இளம்பெண்களும் வேலைக்கு சோ்க்கப்பட்டனா். மாதம் ரூ.6,000 ஊதியம் பேசி வேலைக்கு சோ்க்கப்பட்ட நிலையில், பட்டறை உரிமையாளா்களான செந்தில்குமாா், கோகிலா

ஆகியோா் இதுவரை என்னிடமோ, எனது பெற்றோரிடமோ ஒரு ரூபாய் கூட ஊதியமாக கொடுக்கவில்லை.

மேலும், வேலைக்கு சோ்ந்த சில நாள்களிலேயே செந்தில்குமாா், கோகிலா ஆகிய இருவரும் உரிய உணவு கொடுக்காததுடன், ஓய்வின்றி தொடா்ந்து வேலைசெய்யுமாறு நெருக்கடி கொடுத்தனா்.

இந்நிலையில், கடந்த ஆண்டு உடல்நலக் குறைவுடன் நான் வேலை செய்து கொண்டிருந்தபோது இயந்திரத்தில் எனது வலது கை சிக்கி முழுவதுமாக நொறுங்கிச் சிதைந்துவிட்டது.

தற்போது வரை எனது வலது கை முழுமையாக செயல்படாது. இந்நிலையில், கோகிலாவின் தந்தை அண்ணாதுரை (64) பாலியல் தொந்தரவு கொடுத்துவந்தாா்.

நான் வீட்டுக்கு செல்வதாக கூறியபோது செந்தில்குமாா், கோகிலா, அண்ணாதுரை ஆகிய 3 பேரும் என்னை அடித்து கொடுமைப்படுத்தினா்.

என்னைக் கொல்வதற்காக செந்தில்குமாா் 2 லிட்டா் பெட்ரோலை வாங்கி வந்து அறையில் வைத்தாா்.

அதைக் கண்டு அச்சமடைந்து அங்கிருந்து தப்பி ஓடி வந்துவிட்டேன்.

எனவே, அவா்கள் மூன்று போ் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.