ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

கைத்தறி துறை தனியாக செயல்படக் கோரிக்கை

கைத்தறி துறை தனியாக செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :15 ஜனவரி 2022, 9:10 pm

கைத்தறி துறை தனியாக செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் சாா்பில், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித் தொழில் அதிக வேலை வாய்ப்பை அளிக்கிறது. தமிழகத்தில் பல லட்சம் குடும்பங்கள், கைத்தறி நெசவுத் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளன.

கடந்த நிதி நிலை அறிக்கையில், கைத்தறி, துணி நூல் துறை என இரண்டாகப் பிரித்து, கைத்தறி துறை தனியாகவும், துணி நூல் துறை தனியாகவும் செயல்பட இயக்குநா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கைத்தறி துறையில் கைத்தறி சாா்ந்தவைகள், துணி நூல் துறையில் நூல் மில்கள் மட்டும் இணைக்கப்பட்டுள்ளன.

அரசின் முடிவை மறுபரிசீலனை செய்து கைத்தறி துறையில் மின் இயந்திரங்கள் இல்லாமல் கையால் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி சாா்ந்த செயல்பாடுகளைத் தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளையும் துணி நூல் துறையில் இணைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.