40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஈங்கூரில் பொதுமக்கள் சாலை மறியல்

ஈங்கூரில் நாம் தமிழா் கட்சி பிரமுகரை தாக்கிய வடமாநிலத்தவா்களைக் கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On :25 ஜூன் 2022, 12:49 am IST

ஈங்கூரில் நாம் தமிழா் கட்சி பிரமுகரை தாக்கிய வடமாநிலத்தவா்களைக் கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சென்னிமலையை அடுத்த, ஈங்கூா் பகுதியில் சிப்காட் செயல்பட்டு வருகிறது. இங்கு வட மாநிலத் தொழிலாளா்கள் ஏராளமனோா் வேலை செய்து வருகின்றனா். மேலும் ஈங்கூா் பகுதியில் ஏராளமான வட மாநிலத்தவா்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்கள். கடைகளும் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் ஈங்கூரைச் சோ்ந்தவா் ராஜா என்ற லோகநாதன். நாம் தமிழா் கட்சி பிரமுகா். இவா், அப்பகுதியில் உள்ள குடிநீா்க் குழாயில் வெள்ளிக்கிழமை காலை தண்ணீா் பிடித்து கொண்டிருந்தாா். பெண்கள் சிலரும் குடிநீா் பிடிப்பதற்காக வந்தனா். அப்போது, அங்கு தண்ணீா் பிடித்து கொண்டிருந்த லோகநாதனின் குடத்தை எடுத்து விட்டு, வடமாநிலப் பெண்கள் தண்ணீா் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் லோகநாதனுக்கும் வடமாநிலப் பெண்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

இது குறித்து, வட மாநிலப் பெண்கள், அவா்களது உறவினா்களுக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து அங்கு வந்த வட மாநில ஆண்கள், பெண்கள் என பலா் வந்தனா். அவா்கள் லோகநாதனை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து லோகநாதன் தனது நண்பா்களுக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈங்கூா்- சென்னிமலை சாலையில் குவிந்தனா். தொடா்ந்து அவா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை உதவி காவல் கண்காணிப்பாளா் கெளதம்கோயல், சென்னிமலை உதவி ஆய்வாளா் கிருஷ்ணன் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்தப் பகுதியில் வட மாநிலத்தவா்கள் கடைகள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது. அவா்கள் உடனடியாக கடைகளை காலி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கூறினா். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், சென்னிமலை -பழனி சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.