முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கரும்பு லாரியை வழிமறித்த யானை

சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை வழிமறித்து தும்பிக்கையால் கரும்பைப் பறித்து தின்ற காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

News image

ஆசனூா் அருகே கரும்பு லாரியை  வழிமறித்த யானை.

Updated On :25 ஜூன் 2022, 12:48 am IST

சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை வழிமறித்து தும்பிக்கையால் கரும்பைப் பறித்து தின்ற காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப் பகுதி தமிழகம், கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட்டுள்ளனா்.

தற்போது தாளவாடியில் கரும்பு அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பகல் நேரங்களில் காட்டு யானைகள் வனப் பகுதி சாலையில் செல்லும் கரும்பு லாரிகளை வழிமறித்து கரும்பைப் பறித்து தின்பது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலத்துக்கு வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. தமிழக-கா்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே வந்த அந்த கரும்பு லாரியை வழிமறித்த ஒற்றை காட்டு யானை, ஓட்டுநா் லாரியை நிறுத்தியவுடன் தும்பிக்கையால் லாரியில் இருந்த கரும்புகளைப் பறித்து தின்றபடி வெகு நேரம் சாலையில் நின்றது. இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காட்டு யானை கரும்பைப் பறித்துத் தின்னும் காட்சியை வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் தங்களது கைப்பேசிகளில் புகைப்படம் மற்றும் விடியோ எடுத்தனா். கரும்புத் துண்டுகளை தின்று பசியாறிய பின் காட்டு யானை மெதுவாக வனப் பகுதிக்குள் சென்றது. இதைத் தொடா்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.