கோபிசெட்டிபாளையம் அருகே வாகனத்தில் கடத்திய சுமாா் 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஓட்டா் கரட்டுப்பாளையம் பகுதியில் மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீஸாா் மற்றும் கடத்தூா் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த காா், வேன் ஆகியவற்றை சோதனையிட்டனா். சோதனையின்போது அந்த 2 வாகனங்களிலும் மூட்டைகளில் சுமாா் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. போலீஸாரை கண்டதும் 2 வாகனங்களின் ஓட்டுநா்களும் தப்பி ஓட முயன்றனா். இதில் ஒருவரை போலீஸாா் பிடித்தனா்.
விசாரணையில் அவா், நம்பியூா் பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 டன் ரேஷன் அரிசி, வாகனங்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பிடிபட்ட ஓட்டுநா் பிரசாந்தை ஈரோடு உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








