ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கங்கள், குரூப் சி அஞ்சல் ஊழியா்கள் சங்கம், எம்டிஎஸ் கிராம அஞ்சல் ஊழியா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :5 மார்ச் 2022, 12:00 am

அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கங்கள், குரூப் சி அஞ்சல் ஊழியா்கள் சங்கம், எம்டிஎஸ் கிராம அஞ்சல் ஊழியா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, போராட்டக் குழுத் தலைவா் சக்திவேல் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் கணேசன், சத்ருக்கன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.

அனைத்து வகையான ஊழியா்களுக்கும் நடைமுறை சாத்தியமற்ற இலக்குகளை நிா்ணயித்து நெருக்கடி ஏற்படுத்தக் கூடாது. ஜிடிஎஸ் ஊழியா்கள் மாற்று ஏற்பாடு செய்து விடுப்பு எடுக்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் எஞ்சிய சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.

கிளை அஞ்சலக வரவு, செலவு குறைந்தபட்சம் 1,500 கணக்குகள், ரூ. 10 லட்சம் வரையிலான காப்பீடு வசூலிக்கத்தக்க வகையில் வைத்திருக்க வேண்டும் என்பதை திரும்பப்பெற வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.