பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர்.

இந்த ஆண்டு குண்டம் திருவிழா மார்ச் 21 மற்றும் 22ம் தேதிகளில் விமரிசையாக நடைபெற உள்ளதால் இன்று அதிகாலை பண்ணாரி அம்மன் கோவிலில் பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. முன்னதாக பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து தெப்பக்குளத்தில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு பண்ணாரி அம்மன் மற்றும் மாதேஸ்வரன் சாமிக்கு பூஜைகள் செய்து அம்மனிடம் வரம் கேட்டு பூச்சாட்டுதல் விழா நடந்தது.
தாரை, தப்பட்டை உள்ளிட்ட மேளதாளத்துடன் நடைபெற்ற இந்த விழாவில் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பக்திப் பரவசம் அடைந்த பெண்கள் ஆவேசத்துடன் சாமி ஆடினர். இதைத்தொடர்ந்து இன்று இரவு அம்மன் சப்பரம் திருவீதி உலா தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

தமிழகத்தை வளர்ச்சியின் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்வார் விஜய்: ரேவந்த் ரெட்டி வாழ்த்து!
என் வாழ்நாளில் நினைத்துப் பார்க்காத ஒன்று: செங்கோட்டையன்
திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்: பிரதமர் மோடி
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

