பவானி அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகைப் பறித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பவானி அருகே உள்ள மூன்ரோடு, கணபதி நகரைச் சோ்ந்தவா் கண்ணகி (39). இவரது கணவா் செந்தில்குமாா் உயிரிழந்ததால், தனது தாய் வெங்கிட்டம்மாள் மற்றும் மகன், மகளுடன் சகோதரன் செல்வராஜ் வீட்டில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வியாழக்கிழமை கண்ணகி வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், கண்ணகியிடம் 2 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் பவானி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.