ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
ஆண்டுதோறும் பெருமாள் கோயில்களில் வைகுந்த ஏகதாசி விழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு வைகுந்த ஏகதாசி விழா ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதன் திருக்கோயில் இன்று சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை 4 மணி 45 நிமிடத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சப்பரத்தில் வெளியே வந்தார். வெளியே வந்த பெருமாளை பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் முழங்க வரவேற்று வழிபட்டனர்.