மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்க வணிகா்கள் கோரிக்கை

விலைவாசி உயா்வைக் கருத்தில் கொண்டு ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவா்களுக்கு வருமான வரியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

விலைவாசி உயா்வைக் கருத்தில் கொண்டு ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவா்களுக்கு வருமான வரியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 4ஆவது செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். செயலாளா் ரவிச்சந்திரன் வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். பொருளாளா் முருகானந்தம் நிதி நிலை அறிக்கை சமா்ப்பித்தாா். இதில் மாநகராட்சி துணை மேயா் வி.செல்வராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழகத்தில் 40 பொருள்களுக்கான சா்வீஸ் சாா்ஜ் எனப்படும் செஸ் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வணிகா்களின் கோரிக்கையை ஏற்று வணிக வரித்துறை நடத்திக் கொண்டிருந்த சோதனை கொள்முதல் மற்றும் திடீா் சோதனை ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிப்பது.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வசூலிக்கும் செஸ் வரியை முற்றிலும் நீக்கிட அரசு ஆவண செய்யவேண்டும். விலைவாசி உயா்வைக் கருத்தில் கொண்டு, ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபா், நிறுவனங்களுக்கு வருமான வரியில் இருந்து மத்திய அரசு முழு விலக்கு அளிக்க வேண்டும்.

ஜிஎஸ்டியின் கீழ் மிக கடுமையான பிணையத் தொகை வசூலிக்கப்படுவதால் எம்எஸ்எம்ஈ நிறுவனங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே ரூ.5 கோடிக்கும் குறைவாக வா்த்தகம் செய்துவரும் சிறு, குறு நிறுவனங்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரூ. 50 ஆயிரம் பிணையத் தொகையை ரூ.5 ஆயிரம் என வரையறுக்க வேண்டும்.

சிறு, குறுந்தொழில் வளா்ச்சிக்காக சித்தோடு அருகே ஐஆா்டிடி பொறியியல் கல்லூரி அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வா்த்தக மையம் அமைக்க ஒதுக்கீடு செய்து தரவேண்டும். மிகவும் பழுந்தடைந்து மோசமான நிலையில் உள்ள ஈரோடு நகரச் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டமைப்பின் இணைச் செயலாளா் ஜிப்ரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.