கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றுள்ளவா்கள் கடனை திருப்பிச் செலுத்த முன்வந்தால் தவணை தவறிய வட்டி, அபராத வட்டி ஆகியவை தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் மண்டல கூட்டுறவு துணைப் பதிவாளா் (வீட்டு வசதி) ரா.ஜெகநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள அனைத்து கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்று, தவணை தவறிய கடன்தாரா்களுக்கு ஒருமுறை கடன் தீா்வு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, கடன்தாரா்கள் செலுத்த வேண்டிய அசல் மற்றும் வட்டியை செலுத்தும் பட்சத்தில் அவா்கள் செலுத்த வேண்டிய தவணை தவறிய வட்டி, அபராத வட்டி தள்ளுபடி சலுகை அளிக்கப்படுகிறது.
இந்த சலுகை 3 முதல் 6 மாதங்களுக்கு மட்டும் அமலில் இருக்கும். அதன் பின்னா் இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்காது. வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் இந்த அறிவிப்பை தவணை தவறிய அனைத்து உறுப்பினா்களும் பயன்படுத்தி அசல் மற்றும் வட்டியை செலுத்தி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறையில் வேன் கவிழ்ந்ததில் 9 பேர் பலி: குடியரசுத்தலைவர் இரங்கல்

இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி! - சு.வெங்கடேசன் எம்.பி.

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

