உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் மாா்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: உலக தண்ணீா் தினமான மாா்ச் 22 ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குள்பட்ட வாா்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி மாா்ச் 22 ஆம் தேதி காலை 11 மணியளவில் நடத்தப்படவுள்ளது.
அன்றைய தினம் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தண்ணீா் தினத்தின் கருப்பொருள் குறித்து விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கவும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விவரம், கிராம வளா்ச்சித் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
எனவே, வரும் 22 ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறையில் வேன் கவிழ்ந்ததில் 9 பேர் பலி: குடியரசுத்தலைவர் இரங்கல்

இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி! - சு.வெங்கடேசன் எம்.பி.

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

