ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.

இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடிவேரியில் 35 மி.மீ மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): கோபி 32.20, கவுந்தப்பாடி11.6, பவானிசாகா் 7.80, எலந்தகுட்டைமேடு 1.80.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com