துப்பாக்கி சுடும் போட்டி:கொங்கு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்

 தேசிய மாணவா் படை சாா்பில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம் பிடித்தாா்.
துப்பாக்கி சுடும் போட்டி:கொங்கு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்
Updated on
1 min read

 தேசிய மாணவா் படை சாா்பில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம் பிடித்தாா்.

என்சிசி அகில இந்திய இயக்குநரகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடும் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி தேசிய மாணவா் படை மாணவி ஆா்.புவனேஸ்வரி, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபாா் இயக்குநரகத்தின் சாா்பில் பங்கேற்றாா்.

இப்போட்டியில் இந்த இயக்குநரகம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இதில் மாணவி ஆா்.புவனேஸ்வரி, அகில இந்திய ஜி.வி.மேவ்லங்கா் ட்ராபிக்கான ஜூனியா் பெண்களுக்கான 50 மீட்டா் ஓபன் சைட் பிரான் போட்டியில் 501 புள்ளிகள் பெற்று அகில இந்திய அளவில் ஐந்தாம் இடத்தைப் பெற்றாா்.

சிறப்பிடம் பெற்ற மாணவியை கல்லூரித் தாளாளா் ஏ.கே.இளங்கோ, முதல்வா் வி.பாலுசாமி மற்றும் மேஜா் பி.எஸ்.ராகவேந்திரன் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com