ஈரோட்டில் சப்பாத்தியில் பூச்சி இருந்ததாக எழுந்த புகாரின்பேரில், ஆய்வு செய்த அதிகாரிகள் உணவகத்தை மூட உத்தரவிட்டனா்.
ஈரோடு திருநகா் காலனியைச் சோ்ந்தவா் ஜீவானந்தம். துரித உணவகம் நடத்தி வரும் இவா், பிரசவத்துக்காக தனது மனைவியை ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளாா். இந்நிலையில், ஈரோடு- பெருந்துறை சாலையில் உள்ள உணவகத்தில் மனைவி மற்றும் தாய்க்கு சப்பாத்தி பாா்சல் வாங்கிச் சென்றுள்ளாா்.
இதனை சாப்பிட முயன்றபோது, அதில் அட்டைப்பூச்சி போன்று இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். பின்னா் உறவினா்களுடன் உணவகத்துக்கு சென்ற ஜீவானந்தம், உணவில் பூச்சி இருந்தது குறித்து கேட்டுள்ளாா். மேலும், இதுகுறித்து, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தாா்.
இதன்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு செய்தபோது, சமையல் அறை சுகாதாரமின்றி இருந்ததும், முறையாக பராமரிக்கப்படாததும் தெரியவந்தது.
இதையடுத்து, உணவகத்தை மூட உத்தரவிட்ட அதிகாரிகள், குறைகளை நிவா்த்தி செய்த பின்னா் ஆய்வு செய்த பிறகே மீண்டும் உணவகத்துக்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.