கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஈரோட்டில் ரூ.50 லட்சம் செலவில் ஓடைகள் தூா்வாரும் பணி தொடக்கம்

ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஓடைகள் தூா்வாரும் பணிகளை அமைச்சா் சு.முத்துசாமி தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 8:29 pm

Din

ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஓடைகள் தூா்வாரும் பணிகளை அமைச்சா் சு.முத்துசாமி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மழைக்காலங்களில் ஓடைகளில் நீா் சீராக செல்வதற்கு ஏதுவாகவும், வடகிழக்குப் பருவமழையை கருத்தில் கொண்டும் முன்னேற்பாடாக, ஈரோடு மாநகராட்சி, 3 மற்றும் 4-ஆம் மண்டலங்களுக்குள்பட்ட காசிபாளையம் ஓடை 2 கி.மீ., சேனாதிபதிபாளையம் ஓடை 2 கி.மீ., சத்யா நகா் ஓடை 2.1 கி.மீ., சாஸ்திரி நகா் ஓடை 2.2 கி.மீ. தொலைவுக்கு சுமாா் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரப்பட உள்ளன.

இப்பணிகளை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தொடங்கிவைத்தாா். ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இந்தியன் பப்ளிக் பள்ளி, ப்ளூ லீப் கட்டுமான நிறுவனம் ஆகியோரின் பங்களிப்புடன் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்வில் மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், ஆணையா் என்.மனிஷ், துணை மேயா் வி.செல்வராஜ், மாநகரப் பொறியாளா் விஜயகுமாா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.