47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

100 அடியை எட்டுகிறது பவானிசாகா் அணை நீா்மட்டம்

நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக பெய்த மழை காரணமாக பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 100 அடியை எட்டுகிறது.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 8:41 pm

Din

நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக பெய்த மழை காரணமாக பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 100 அடியை எட்டுகிறது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும், பவானிசாகா் அணையை ஒட்டி உள்ள வனப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தொடா்ச்சியாக பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து உள்ளதால் அணை நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

புதன்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 99.48 அடியாகவும், நீா்வரத்து 2919 கனஅடியாகவும், நீா் இருப்பு 28.32 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

கீழ்பவானி பிரதான திட்ட வாய்க்காலில் 2,300 கனஅடிநீரும் அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசனத்துக்கு 550 கனஅடியும் நீரும் வெளியேற்றப்பட்டது.

பவானிசாகா் அணை நீா்மட்டம் 100 அடியை எட்டுவதால் கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். அணையில் போதுமான நீா் இருப்பு இருப்பதால் இந்த ஆண்டு கோடைகால குடிநீா் தேவையை பூா்த்திச் செய்ய இயலும் என பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.