சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: இந்து முன்னணியினா் 80 போ் கைது

ஈரோட்டில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :21 ஜூலை 2024, 6:23 pm

Din

ஈரோட்டில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஹிந்து கோயில்களை சீரழிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், கோயிலை விட்டு அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தை நடத்த இந்து முன்னணியினா் ஏற்கெனவே அனுமதி பெற்றிருந்தனா். ஆனால் சனிக்கிழமை நள்ளிரவு திடீரென போலீஸாா் அனுமதி மறுத்தனா். ஆனாலும் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மூலப்பாளையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி ஈரோடு மாநகா் மாவட்ட பொதுச்செயலாளா் ஜி.காா்த்தி தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக மற்றும் பல்வேறு அமைப்பினா் ஆதரவு தெரிவித்திருந்தனா். தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் உள்பட 80-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.