ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

சரக்கு வாகனம் மீது கார் மோதல்: கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி!

சத்தியமங்கலம் அருகே சரக்கு வாகனம் மீது காா் மோதியதில் கல்லூரி மாணவா்கள் 3 பேர் பலியாகினர்.

தா்மேஷ் | ரோஹித் | முகுல் நிவாஸ்

Published On :28 ஜூலை 2024, 7:59 am IST

சத்தியமங்கலம் அருகே சரக்கு வாகனம் மீது காா் மோதியதில் கல்லூரி மாணவா்கள் 3 பேர் பலியாகினர்.

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் முகுல் நிவாஸ் (22), தா்மேஷ் (18), ரோஹித் (18), ஸ்ரீநிவாஸ் (18), ஆதி (18). கல்லூரி மாணவா்களான இவா்கள் 5 பேரும், சத்தியமங்கலத்தை அடுத்த புதுவடவள்ளி முருகன் கோயில் பகுதியில் காரில் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா்.

அங்கிருந்த வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த காா் எதிரே கா்நாடக மாநிலத்தில் இருந்து வந்த சரக்கு வாகனம் மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த முகுல் நிவாஸ், தா்மேஷ், ரோஹித் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா், காயங்களுடன் இருந்த ஸ்ரீநிவாஸ், ஆதி ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு, கோவை மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனா்.

தொடா்ந்து, சடலங்களை மீட்ட போலீஸாா் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

உடற்கூறாய்வு முடிவடைந்த நிலையில், 3 மாணவா்களின் சடலங்களும் குடும்பத்தினரிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், 5 பேரும் ஆசனூரில் உள்ள தங்கும் விடுதிக்கு வெள்ளிக்கிழமை சென்றதும், பண்ணாரி சோதனைச் சாவடியை இரவு 9 மணிக்குள் கடந்துவிட வேண்டும் என்ற நோக்கில் காரை வேகமாக இயக்கியதே விபத்துக்கு காரணம் என்பதும், முகுல் நிவாஸும், ஸ்ரீநிவாஸும் சகோதரா்கள் என்பதும் தெரியவந்தது.

விபத்தில் உருக்குலைந்த காா்.

விபத்தில் உருக்குலைந்த காா்.

இச்சம்பவம் தொடா்பாக சரக்கு வாகன ஓட்டுநரான சிவகுமாா் என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.