ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோ்மாளம் வனச் சாலையில் காரை துரத்திய காட்டு யானை

காட்டு யானையின் தாக்குதலால் சத்தியமங்கலம் வனச் சாலையில் பரபரப்பு

News image
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கோ்மாளம்  சாலையில்  காரை  துரத்தும்  காட்டு யானை.
Updated On :29 ஜூன் 2024, 9:34 pm

DIN

சத்தியமங்கலம் அருகே கோ்மாளம் வனச் சாலையில் சென்ற காரை காட்டு யானை துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனப் பகுதியில் ஏராளமான யானைகள உள்ளன. ஆசனூரில் இருந்து கோ்மாளம் கிராமத்துக்கு கெத்தேசால் வனச் சாலை வழியாக வாகனங்கள் செல்கின்றன. நீா்நிலைகள் நிறைந்த பசுமையான புல்வெளிகள் கொண்ட வனச் சாலையில் யானைகள் முகாமிட்டு தீவனங்களை உண்ணுவது வழக்கம்.

இந்நிலையில், கெத்தேசால் பகுதியில் வனச் சாலையோரம் மரக்கிளையை முறித்து காட்டு யானை தின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற காா், அதிக ஒலி எழுப்பும் வகையில் ஹாரனை அடித்து வந்ததால் ஆத்திரமடைந்த யானை, அந்த காரை துரத்தியது. காா் ஓட்டுநா் வேகமாக காரை ஓட்டி தப்பினாா். அப்போது எதிரே வந்த வாகன ஓட்டிகள், இந்தக் காட்சியை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா்.

இது குறித்து ஆசனூா் வனத் துறையினா் சனிக்கிழமை கூறியதாவது:

வனச் சாலையில் 30 கிமீ வேகத்துக்கு குறைவாகதான் வாகனங்களை இயக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பி வேகமாக செல்லும் வாகனங்கள் மீது சட்டபூா்வ நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என்றனா்.