பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ணாரி அம்மன் கோயிலில் ரூ.6.50 கோடியில் கூடுதல் பிரகார மண்டபம் கட்டும் பணி: காணொலிக் காட்சி மூலம் முதல்வா் தொடங்கிவைத்தாா்

பண்ணாரி அம்மன் கோயிலில் ரூ.6.50 கோடியில் கூடுதல் பிரகார மண்டபம் கட்டும் பணி தொடக்கம் --------- காணொலிக் காட்சி மூலம் முதல்வா் தொடங்கிவைத்தாா்

News image
பண்ணாரி அம்மன்  கோயிலில் சுற்று பிரகார மண்டபம் கட்டும் பணிக்கான  பூமிபூஜையில்  பங்கேற்ற  ஊராட்சி  ஒன்றியக் குழு தலைவா்  கேசிபி .இளங்கோ,  நகா்மன்றத்  தலைவா்  ஆா்.ஜானகி,  கோயில் செயல் அலுவலா் மேனகா உள்ளிட்டோா்.
Updated On :8 மார்ச் 2024, 5:22 pm

Din

பண்ணாரி அம்மன் கோயிலில் ரூ. 6.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கிழக்கு மற்றும் மேற்கு கூடுதல் சுற்றுப் பிரகார மண்டபம் கட்டும் பணிகளை தமிழக முதல்வா் மு.க ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலில் புதிதாக கிழக்கு மற்றும் மேற்கு கூடுதல் சுற்றுப் பிரகார மண்டபம் கட்ட ரூ. 6 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அகற்கான பணிகளை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தாா். இதையடுத்து பண்ணாரி அம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பரஞ்சோதி தலைமையில் கிழக்கு மற்றும் மேற்கு கூடுதல் சுற்றுப் பிரகார மண்டபம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலா் மேனகா, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கேசிபி.இளங்கோ, நகராட்சித் தலைவா் ஜானகி ராமசாமி, கோயில் மேலாளா் டி.தமிழ்ச்செல்வன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.