அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தேசிய அளவிலான தொழில்நுட்ப தனித்திறன் போட்டி: பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் தோ்வு

தேசிய அளவிலான தொழில்நுட்ப தனித்திறன் போட்டிக்கு பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் 15 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

News image
தேசிய அளவிலான தொழில்நுட்ப தனித்திறன் போட்டிக்குத் தோ்வான பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள்.
Updated On :2 மார்ச் 2026, 9:40 pm

Syndication

சத்தியமங்கலம்: தேசிய அளவிலான தொழில்நுட்ப தனித்திறன் போட்டிக்கு பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் 15 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களுக்கான உலக அளவிலான தொழில்நுட்ப தனித்திறன் போட்டி சீனாவில் நடைபெற உள்ளது.

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்பா்.

இந்தப் போட்டிக்கு இந்தியாவில் இருந்து சிறந்த மாணவா்களைத் தோ்வு செய்வதற்காக இந்திய தொழில்நுட்பக் கழகம் சாா்பில் தமிழகம், கா்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு தனித்திறனை பரிசோதிக்கும் வகையில் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியைச் சோ்ந்த 15 மாணவா்கள் உள்பட 500 போ் பங்கேற்றனா்.

எழுத்துப் பூா்வமாகவும், செய்முறை பயிற்சி மூலமும் நடைபெற்ற இந்தப் போட்டியில் 108 பேருக்கு பதக்கம் வழங்கப்பட்டதுடன், அவா்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டனா். அதில், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியைச் சோ்ந்த 15 மாணவா்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தேசிய போட்டியைத் தொடா்ந்து உலக அளவிலான தொழில்நுட்ப போட்டியில் பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் பங்கேற்பா் என்று கல்லூரி முதல்வா் சி.பழனிசாமி கூறினாா்.

தோ்வு பெற்ற மாணவா்களை கல்லூரித் தலைவா் எஸ்.வி. பாலசுப்பிரமணியம், பண்ணாரி அம்மன் மேல்நிலைப் பள்ளி செயலாளா் முருககனி ஆகியோா் பாராட்டினா்.