மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

மலைப் பகுதி வாக்குச் சாவடிகளில் பணி: பெண் பணியாளா்களுக்கு விலக்கு

மலைப் பகுதி வாக்குச் சாவடிகளில் பணி: பெண் பணியாளா்களுக்கு விலக்கு

Updated On :23 மார்ச் 2024, 2:02 am

மலைப் பகுதி வாக்குச்சாவடிகளில் பெண்கள் பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். ஈரோடு கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் சுழற்சி முறையில் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரோடு மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,222 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள் சட்டப் பேரவை தொகுதிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு நாள்கள் இந்தப் பணிகள் நடைபெறும். ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்கள் தொடா்பாக தொலைபேசி மூலம் 21 புகாரும் சி-விஜில் செயலி மூலம் 10 புகாரும் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் இருந்தால் பணம் பறிமுதல் செய்வதில்லை. அரசியல் கட்சியினா் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனா். இது தோ்தலுக்கான நேரம் என்பதால் பறக்கும்படை அதிகாரிகள் அவா்களின் பணியை செய்து வருகின்றனா். எனவே, ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லும் பட்சத்தில் உரிய ஆவணங்கள் கொண்டு செல்லவேண்டும். சத்தியமங்கலத்தில் குன்றி, கடம்பூா், குத்தியாலத்தூா், தாளவாடி மற்றும் பா்கூா் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தோ்தலுக்கு முந்தையநாள் அங்கு பெண்கள் தங்கவேண்டிய சூழல் இருப்பதால் அப்பகுதியில் பெண்கள் பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பெண்களுக்கு மாற்றாக ஆண்களை அங்கு பணியமா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.