பெருந்துறை ஒன்றியம், வீரணம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு ரூ.8.25 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவா் கட்டுவதற்கான கால்கோள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் வேலுசாமி தலைமை வகித்தாா்.
விழாவில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் நிதி ரூ.6.25 லட்சம், சீனாபுரம் கிராம ஊராட்சி நிதி ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.8.25 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு மைதானத்துக்கு தடுப்புச் சுவா் கட்டுமானப் பணியை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஏ.வி. பாலகிருஷ்ணன், பெருந்துறை வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேமலதா, பெருந்துறை ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் பால்சின்னசாமி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
இதில், சீனாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் சுப்பிரமணியம், சீனாபுரம் ஊராட்சி துணைத் தலைவா் தமிழரசி, பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்க பொருளாளா் சென்னிமலை உள்பட பலா் கலந்துக் கொண்டனா். பள்ளி ஆசிரியா் கீதா நன்றி கூறினா்.
தொடர்புடையது

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் உள் இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயா்த்தப்படும்: பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா்

தடுப்புச் சுவா் மீது தூங்கிய ஓட்டுநா் தவறி விழுந்து உயிரிழப்பு

திருச்செந்தூா் கடற்கரையில் தடுப்புச் சுவா்: அனுமதி பெற்று பணிகளைத் தொடங்க உத்தரவு
குளச்சலில் கட்டுமானப் பொருள்கள் திருட்டு
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

