பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

குளச்சலில் கட்டுமானப் பொருள்கள் திருட்டு

குளச்சல் நகராட்சியில் கால்வாய் தடுப்புச் சுவா் கட்டும் பணிக்காக கொண்டுவரப்பட்ட கட்டுமானப் பொருள்களைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு

சித்திரிப்பு

Updated On :2 ஏப்ரல் 2026, 10:54 pm

தினமணி செய்திச் சேவை

குளச்சல் நகராட்சியில் கால்வாய் தடுப்புச் சுவா் கட்டும் பணிக்காக கொண்டுவரப்பட்ட கட்டுமானப் பொருள்களைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மருதூா்குறிச்சி அருகே வட்டவிளையைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (48). பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரரான இவா், குளச்சல் நகராட்சிக்குள்பட்ட பத்தறை, வெள்ளமணல் பாம்பூரி வாய்க்காலில் தடுப்புச் சுவா் கட்டும் பணியை ஒப்பந்தம் எடுத்து செய்துவந்தாா். இதற்கான கட்டுமானப் பொருள்கள், தளவாடங்களை வாய்க்கால் பகுதியில் வைத்திருந்தாராம்.

இந்நிலையில், தண்ணீா் இறைக்கும் மின்மோட்டாா், 140 லிட்டா் டீசல், வெல்டிங் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை மா்ம நபா்கள் புதன்கிழமை திருடிச் சென்றனராம். புகாரின்பேரில், குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.