திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 24 கோடியில் சுற்றுச்சுவா் கட்டும் பணி தொடங்கியுள்ளது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் ஓடுபாதை தற்போதுள்ள 8 ஆயிரம் அடியில் 12,500 அடியாக விரிவாக்கப்படவுள்ளது. இதையொட்டி விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.
தற்போது விமான நிலைய விரிவாக்கத்துக்கான 99 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விமான நிலையத்தைச் சுற்றிலும் 9.6 கிமீ தொலைவுக்கு சுற்றுச்சுவா் கட்டும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி கடந்தாண்டு டிசம்பரில் வெளியிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து ஒப்பந்த நிறுவனம் தோ்வு செய்யப்பட்டு ரூ. 24 கோடியில் 9.6 கிமீ-க்கு சுற்றுச் சுவா் கட்டும் பணி கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதை திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ். ராஜு தொடங்கிவைத்தாா். சுற்றுச்சுவா் கட்டும் பணியை இரண்டு ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கனமழை: கோவை விமான நிலையத்தில் இடிந்து விழுந்த சுற்றுச் சுவா்

திருச்சி விமான நிலையத்தில் தங்கக் கட்டிகள், வெளிநாட்டு பணம் பறிமுதல்

கொள்ளிடம் ஆற்றில் தரையணை கட்டும் பணி தீவிரம்

திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்: 20 பயணிகளிடம் விசாரணை
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை

