திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 93 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கக் கட்டிகள், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு கடந்த மே 9-ஆம் தேதி இரவு சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தின் கழிப்பறையில் சந்தேகப்படும் வகையில் பொருள்கள் கிடப்பதாக விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நுண்ணறிவுப் பிரிவு மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விமானத்தில் சோதனை நடத்தினா்.
அப்போது, கழிப்பறையில் இருந்த கருப்பு நிற பையை எடுத்து சோதனையிட்டனா். அதில், ரூ.93 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது.
இதேபோல, விமான நிலையத்தில் உள்ள கழிப்பறையில் இருந்த பையில் ரூ.6.72 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையெடுத்து வந்த பயணி யாா் என்ற விவரம் ஏதும் தெரியவில்லை.
இதையடுத்து, தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவற்றை சுங்கத் துறை மற்றும் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 24 கோடியில் சுற்றுச் சுவா் கட்டும் பணி தொடக்கம்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை

சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் ரூ.3.10 கோடி தங்கக் கட்டிகள்: சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

