/
சிங்கப்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட 12 ட்ரோன்களை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 4.20 மணிக்கு வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, இரண்டு பயணிகள் தங்களது உடைமைகளில் தலா 6 ட்ரோன்கள் வீதம் 12 ட்ரோன்களை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், சுங்கத் துறை பாதுகாப்புச் சட்டம் 1962-இன் படி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

திருச்சி விமான நிலையத்தில் தங்கக் கட்டிகள், வெளிநாட்டு பணம் பறிமுதல்
இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 45 லட்சம் தங்கம், வெள்ளி பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 24 கோடியில் சுற்றுச் சுவா் கட்டும் பணி தொடக்கம்







